Breaking News

இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு மிகவிரைவில் உருவாக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதி.

இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான ஆலோசனை பெறுக்கொள்ளும்  செயற்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டரங்கள் தெரிவிக்கிண்றன.

புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்து ஆறு மாத காலங்களுக்குள் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார். இதனை அடிப்படையாக கொண்டு இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கல்விமான்கள் மற்றும் சமுக சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இதன்படி தம்மிடமும் இது தொடர்பான ஆலோசனை கோரப்பட்டிருப்பதாக, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.