Breaking News

குழந்தையொன்றுக்கு காயமேற்பட்டதால் தரையிறக்கப்பட்ட விமானம்

குழந்தையொன்றுக்கு காயமேற்பட்டதால் தரையிறக்கப்பட்ட விமானம்

எம்.ஐ.அப்துல் நஸார்

 ஜகர்தாவிலிருந்து சவூதி அரேபியா நோக்கி பறந்துகொண்டிருந்த இந்திய விமானமொன்றினுள் மூன்று வயது குழந்தையொன்றுக்கு விமானத்தினுள் தரையில் விழுந்ததனால் தலையில் காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக குறித்த விமானம் நேற்றைய தினம் (27) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தையின் காயங்களுக்கு விமான நிலையத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.