Breaking News

இஷாந்த் - தம்மிக மோதலை ரசித்தேன்.. சிரிச்சிக்கிட்டே கூறும் கோஹ்லி

வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா மற்றும் இலங்கை வீரர் தம்மிகா பிரசாத் இடையே நடந்த மோதல் கட்டுக்குள்தான் இருந்தது என்றும், அதை தான் வெகுவாக ரசித்ததாகவும் கூறியுள்ளார் கேப்டன் விராத் கோஹ்லி. கோஹ்லியிடம் இருந்து வந்த ஆக்ரோஷம் இப்போது அவரது தலைமையிலான அணிக்கும் மாறியிருப்பை பலரும் கவலையுடன் உற்று நோக்கினாலும் கூட இந்த ஆவேச மோதல் தன்னை மகிழ்வித்ததாக கூறியுள்ளார் கோஹ்லி. இஷாந்த், தம்மிகா இடையிலான மோதல் தனக்கு மகிழ்ச்சி தந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கட்டுக்குள் இருக்கும் வரை எதுவும் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி: 

மோதல் நல்லதுதான் அந்த சம்பவம் எனக்கு மகிழ்ச்சியே தந்தது. நான் வருத்தப்படவில்லை. சரியான சமயத்தில்தான் அது நடந்தது. வேண்டும் என்றே அவர்கள் இஷாந்த்தை கோபப்படுத்தினர். அதனால்தான் அவரும் கோபப்பட்டார்.