Breaking News

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்றுகூடல்

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்றுகூடல்


எம்.ஐ.அப்துல் நஸார்

காத்தான்குடி மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முழு நிலவில் ஊடகவியலாளர் ஒன்றுகூடல் என்ற தலைப்பிலமைந்த காத்தான்குடியினை தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் ஊடகவியலாளர் ஒன்றுகூடல் நிகழ்வு காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைரூஸ் தலைமையில் காத்தான்குடி கடற்கரையில் சனிக்கிழமை (26) இரவு 09.00 மணி தொடக்கம் மறுநாள் - அதாவது இன்று (27) அதிகாலை 4.00 மணிவரை நடைபெற்றது

ஊடகப் பாராளுமன்றம், ஒரு தலைப்பில் பேசுதல், நகைச்சுவை அரங்கு மற்றும் பேட்டி நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றதோடு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. ஊடகவியலாளர்களுக்கு இராப் போசனமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது

இந்த ஊடகவியலாளர் ஒன்றுகூடல் நிகழ்வில் நிருவாக சபை அங்கத்தவர்களும் பொதுச்சபை அங்கத்தவர்களும் பங்குபற்றினர்

சிரேஷ்ட ஊடகவியலாளர் மதியன்பன் மஜீதினால் எழுதித் தொகுக்கப்பட்ட ஆனாலும் திமிருதான் அவளுக்கு என்ற கவிதை நூலும் நூலாசிரியரால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது