கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு தாந்தாமலை பெருவட்ட மலை பகுதியில் புதையல் தொண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது
கொக்கட்டிச்சோலை கரடியனாறு தாந்தாமலை பெருவட்ட மலை பகுதியில் புதையல் தொண்டும் நடவடிக்கையில் 7 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.B.H.C. பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ் தாந்தாமலை பொலிஸ் காவல் நிலைய பொறுப்பதிகாரி P.S.S. நாகராஜா தலைமையிலான 18 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,இதன் போது புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .
புதையல் தோண்டும் நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் இன்று மட்டக்களப்பு களவாஞ்சிக்குடி நீதி மன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும் ,
பொலிசார் மேற்கொண்ட கைது நடவடிக்கையின் போது தப்பி சென்றுள்ள நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .