Breaking News

நள்ளிரவில் ஆண்களுடன் நிர்வாணப் பூஜை : மேலும் ஒரு வழக்குப்பதிவு

தோண்டத் தோண்ட ஆபாச தகவல்களை வாரிவழங்கும் சுரங்கமாக மாறிப்போன பெண் சாமியார் ராதே மா மீது பிரபல டி.வி. நடிகை அளித்த பகீர் புகாரையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த பெண் சாமியார் மீது மும்பை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிக் பாஸ் தொடரில் தோன்றியதன் மூலம் பிரபலமடைந்த டாலி பிந்த்ரா(45), சில இந்தி நாடகங்களிலும், சினிமாக்களிலும் நடித்துள்ளார். அரை டவுசர்-டி-ஷர்ட்டுடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய பெண் சாமியார் ராதே மாவின் தீவிர பக்தையாக இருந்துவந்த டாலி பிந்த்ரா, தனக்கு ‘பிள்ளை வரம்’ அருள்வதாக வாக்குறுதி அளித்திருந்த ராதே மாவின் மீது மும்பை போலீசாரிடம் அடுக்கடுக்காக புகார் தெரிவித்திருந்தார். ஏற்கனவே வரதட்சனை வழக்கில் மும்பை போலீசாரிடம் சிக்கி, படாதபாடு பட்டுவரும் ராதே மா, நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் ‘சத்சங்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு தன்னை வறபுறுத்தியதாகவும் ‘செக்ஸ் பார்ட்டிகள்’ போல நடைபெற்ற அந்த சத்சங் நிகழ்ச்சிகளின்போது, தன்னை நிர்வாணப்படுத்தி, பிற ஆடவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள அவர் தூண்டியதாகவும் மும்பை போலீசாரிடம் அளித்த புகாரில் டாலி பிந்த்ரா தெரிவித்திருந்தார். ஆண் பக்தர்களுடன் பேசும்போது, பஞ்சாபி மொழியில் ஆபாசமாக சங்கேத பாஷையில் பேசும் பழக்கம்கொண்ட ராதே மா, தனது கணவரையே அபகரிக்க முயன்றதாகவும் அந்தப் புகாரில் டாலி பிந்த்ரா குறிப்பிட்டிருந்தார்.  அவர் மீது இதுவரை ஏன் புகார் தெரிவிக்காமல் இருந்தீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிந்த்ரா, எனக்கு நீண்ட காலமாக பிள்ளை பாக்கியம் கிட்டவில்லை. எனக்கு குழந்தை பிறக்க வழிசெய்கிறேன் என ராதே மா வாக்குறுதி அளித்திருந்ததால் அவர் மீது புகார் கூற நான் தயக்கம் காட்டி வந்தேன் என்று தெரிவித்தார். தற்போது, அவரது நிஜமுகத்தை நான் வெளிப்படுத்தி விட்டதால், போலீசில் நான் புகார் அளித்த நாளில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் அதிகரித்து வருகின்றது எனவும் பிந்த்ரா டாலி அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294, 354, 506(2), 109, 120பி ஆகிய பிரிவுகளின்கீழ் ராதே மா மீது மும்பை போரிவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக மும்பை (வடக்கு) கூடுதல் போலீஸ் கமிஷனர் ஃபதே சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.