Breaking News

புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஏழு தளத்திலான இராஜகோபுர‏ நிர்மாணப்பணிகள் ஆரம்பம்.

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்  ஏழு தளத்திலான  இராஜகோபுர  நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப பணிகள் நேற்று காலை ஆலய நிருவாக சபை தலைவர் ஞானப்பு தலைமையில் பொது மக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் பொது மக்கள் ஆகியோர்  கலந்துகொடனர் .

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்  இராஜகோபுர  அனைத்தும் பணிகளும்  பொது மக்களின்  நன்கொடையில்  இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.