Breaking News

சந்திரனும், புவியும் சுற்றுப்பாதையில் அருகில் நெருங்கி பயணிப்பதால் அசாதாரண காலநிலை குறித்து எச்சரிக்கை.

செப்டம்பர் 27 - 28ஆம் திகதி புவியும் சந்திரனும் அருகில் நெருங்கி பயணிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்விளைவாக கடலில் கொந்தளிப்பு சில சமயங்களில் அசாதாரணமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவியை சுற்றி நிலவு பயணிக்கும் சுற்றுப்பாதையில் நெருக்கமாக வரும் எனவும். எதிர்வரும் 28 ஆம் திகதி புவிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் வெகுவாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சீகிரிய குன்றிலிருந்து சூரிய உதயத்தை சுற்றுலாப் பயணிகள் காணும் அறிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் ப்ரிஷாந்த தகவலை வெளியிட்டுள்ளார்.