வேற்றுக்கிரகவாசிகள் என்னை கற்பழித்துவிட்டார்கள்
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். லாக்ஹீட் மார்டின் அமெரிக்காவின் உலக அளவிலான விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாகும் . உலகளவிய பாதுகாப்பு மற்று ம் உயரிய தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி என்ஜினியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் பாய்ட்புஷ்மேன். (வயது 78) கடந்த ஆகஸ்ட் மாதம் மரணம் அடைந்து விட்டார். வேற்று கிரகவாசிகளுடன் உரையாடியதாகவும் அதன்மூலம் வேற்று கிரக வாசிகளான வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டதாகவும் அவர் படங்களுடன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது நண்பர் மார்க் கியூ பாட்டர்சன்னுடன் தெரிவித்து உள்ளார். இவர் தனியார் விண்வெளி என்ஜினீயர் ஆவார். பாட்டர்சன் தனது நண்பர் பாய்ட் புஷ்மேனின் பேசுக்களை தொகுத்து பேட்டியாக யூடியூப்பில் வெளியிட்டு இருந்தார். தற்போது அமெரிக்க விமானப்படை முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் வேற்று கிரகவாசிகள் தன்னை கடத்திச் என்று கற்பழித்ததாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளார். அமெரிக்க விமானப் படையில் ரேடார் டிராபிக்கிங் ஆபரேட்டராக இருந்தவர் நியாரா தெரலா இஸ்லீ (60). இவர் நெவேடாவில் உள்ள விமானப்படை தளத்தில் டூனோபா சோதனை பகுதியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் கொலரடோ மாநிலத்தில் வசித்து வருகிறார். 1980களில் எனக்கு 25 வயது இருக்கையில் வால் உள்ள ஊர்ந்து செல்லும் வேற்று கிரகவாசிகளால் நான் கடத்தப்பட்டேன். அவர்கள் 7 மாத இடைவெளியில் என்னை 8 முதல் 10 முறை கடத்தி நிலாவுக்கு கொண்டு சென்றனர். என்னை நிலாவில் வைத்து அவர்கள் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். தினமும் இரவு என்னை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இரவு நேரத்தில் என்னை தூங்க விடாமல் ஒருவர் மாற்றி ஒருவர் பலாத்காரம் செய்தனர். என் குழந்தையிடம் திரும்பி வர வேண்டும் என்பதால் அவர்கள் செய்ததை எல்லாம் பொறுத்துக் கொண்டேன். நான் எதிர்ப்பு தெரிவித்தால் எங்கே என்னை கொன்றுவிடுவார்களோ என பயந்தேன். ஹிப்னாசிஸ் செய்த பிறகே இவை அனைத்தும் எனக்கு நினைவுக்கு வந்தது என்றார்.



