Breaking News

திருகோணமலையில் இயங்கியதாக கூறப்படும் இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை அதிகாரிகள் விரைவில் கைதாகலாம் !

திருகோணமலையில் இயங்கியதாக கூறப்படும் இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஐக்கிய நாடுகள் அமைப்பின்  பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பிலான பிரதிநிதிகள் அண்மையில் இலங்கை விஜயம் செய்திருந்த போது அவர்களை புலனாய்வுப் பிரிவினர், குறித்த இரகசிய கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு அமைய துணைப் பொலிஸ் அத்தியட்சகர்கள் தலைமையிலான குழுவொன்று ஆரம்பித்த விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 20 கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.