Breaking News

மட்டக்களப்பு கல்லடி – ஆரையம்பதி சகவாழ்வுக்கான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாவற்குடா இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற தீபத்திருநாள் நிகழ்வுகள்.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன அனுசரணையில் சகவாழ்வுக்கான சர்வமத ஒன்றியத்தின்   ஏற்பாட்டில் தீபத்திருநாள் நிகழ்வு நாவற்குடா இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வானது சகல மதங்களுகிடையில்  சமாதானம்  சகவாழ்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு கல்லடி – ஆரையம்பதி   சகவாழ்வுக்கான சர்வமத ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  . 

இந்நிகழ்வில் தமிழ் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகளும் தமிழ் பாரம்பரிய இனிப்பு பண்டங்களும்  பரிமாறப்பட்டு  இந்த தீபத்திருநாள்  சிறப்பிக்கப்பட்டது   . 

இந்நிகழ்வில்  பிரதம அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்   வி .தவராசா , கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர்  அருட்பணி . ஜெரோம் டிலிமா , கௌரவ அதிதிகளாக கல்லடி இராமகிருஷ்ண மிசன்  தலைவர் சுவாமி சதுர்ப்புஜானந்தா , அருட்பணி ஜோசெப் மேரி ,  மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர்  கே . குணநாயகம் மற்றும் சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்