Breaking News

மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலை பத்து வயது சிறுவனின் சடலம் மீட்பு !


மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மயிலம்பாவெளி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலை  பத்து வயது சிறுவனின்  சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்  பொலிசார் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு மயிலம்பாவெளி  காமாச்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த   (பிரேமச்சந்திரன்  ஜெனிஸ்டன்  வயது பத்து )    மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  தரம் ஐந்தில் கல்வி  பயின்ற  மாணவனே தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக நேற்று மாலை  ஏறாவூர் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் சடலம்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  வைக்கப்பட்டு  சிறுவனின் மரணம்  தொடர்பான விசாரணையின்  சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளதாக   பொலிசார் தெரிவிக்கின்றனர் .