Breaking News

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தின் ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது .

கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தினால்  வருடாந்தம் நடாத்தப்படும்   ஒளிவிழா நிகழ்வு   பறங்கியர் சங்க தலைவர்  டெரன்ஸ் செல்லர் தலைமையில்   நேற்று மாலை மட்டக்களப்பு   தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது .

ஆரம்ப நிகழ்வாக   பறங்கியர் சங்க உறுபினர்களின்  சிறுவர்களினால் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை   மலர் செண்டு வழங்கி  அழைத்து வரப்பட்டனர் .

அதனை தொடர்ந்து   இறைவணக்கத்துடன்  கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தினால்  வருடாந்தம் நடாத்தப்படும்   ஒளிவிழா கலை  நிகழ்வுகள் இடம்பெற்றது .

ஒளிவிழா  நிகழ்வில்    பிரதம  விருந்தினராக  மட்டக்களப்பு  மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் கலந்துகொண்டார் .

இந்நிகழ்வில் அதிதிகளாக  மட்டக்களப்பு கல்லடி  231வது பாதுகாப்பு பிரிவு கட்டளை அதிகாரி லெப்டினல்  கேணல்  ரோஹான் ராஜபக்ச ,  மேஜர்   அனுர துனதிலக  ,  கேணல்  சம்பத் லியனகே  , முன்னால் கிழக்குமாகாண பறங்கியர் சங்க தலைவர்  சனி ஒக்கஸ்   மற்றும்   ஒளிவிழா நிகழ்வுக்கு  வருகை தந்த கிழக்கு மாகாண   பறங்கியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் பறங்கியர் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும்  நடன நிகழ்வுகளும்   , கலாச்சார மொழியிலான பாடல்களும்   இடம்பெற்றதுடன்  ,  பாடசாலை  மாணவர்களில்  ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் மற்றும்  கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும்  பசில்களும் , கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு  பறங்கியர் சங்க உறுப்பினர்களின் விதவை பெண்களுக்கான வருடாந்தம்  வழங்கப்படும் கொடுப்பனவுகளும்   வழங்கிவைக்கப்பட்டது