வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்று பிற்பகல் 02.00 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் வெபர் மைதானத்தில் இடம்பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை பாடசாலை மாணவர்களால் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்ல கொடிகள் ஏற்றி பாடசாலை கீதம் இசைக்கப்பட்டது.
விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
இப் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம் உதயகுமார் கலந்துகொண்டார்
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரிகளான உதவி கல்விப் பணிப்பாளர் த .யுவராஜா ( தமிழ் ) உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி . எஸ் . கங்கேஸ்வரன் (கல்வி அபிவிருத்தி ) மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன்,காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெலகெதர மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .



