25வயதான கனேடியப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவர் கைது
காலி, தனிபோல்கஹ பகுதியில் 25 வயதான கனேடியப் பெண் ஒருவருக்கு பாதுகாப்பான தங்கிமிடத்தை தேடித்தருவதாக கூறி அவரை அழைத்துச்சென்ற குறித்த 27 வயதுடைய சந்தேகநபர் அப்பெண்னை துஷ்பிரயோகத்திற்கு உளாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் காலி துறைமுகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பொருட்டே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு இன்று அவர் காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.