Breaking News

இளவரசர் வில்லியம் அரண்மனை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

இங்கிலாந்தில் தலைநகர் லண்டனில் கென்சிங்டன் அரண்மனை உள்ளது. இங்கு இளவரசர் வில்லியம் அவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன், குழந்தைகள் ஜார்ஜ், சார்லோட் ஆகியோருடன் தங்கியுள்ளார்.

இந்த அரண்மனையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் பணி நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை குறையும் வாய்ப்பு உள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு ஊழியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து பொது மற்றும் வணிக சேவை யூனியனை சேர்ந்தவர்கள் அரண்மனை ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.