செங்கடலிற்கு குறுக்கே சவுதி அரேபியா–எகிப்தை இணைக்கும் புதிய பாலம்
சவுதி அரேபியா மற்றும் எகிப்தை இணைக்கும் வகையில் செங்கடலின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும் என மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
எகிப்தில் ஏற்பட்ட புரட்சிக்கு பிறகு ஜனநாயக முறைப்படி முகமது முர்சி புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் சவுதி அரேபியாவுக்கும், எகிப்துக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
கடந்த 2013–ம் ஆண்டில் மோர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டு ராணுவ தளபதி அப்துல் பதே அல்– சிசி புதிய அதிபரானார். அதை தொடர்ந்து தற்போது சவுதி அரேபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே மீண்டும் உறவு மலர்ந்துள்ளது.
அதை தொடர்ந்து சவுதி அரேபியா மன்னர் சல்மான் (80) சமீபத்தில் எகிப்து வருகை தந்தார். அவரை தலைநகர் கெய்ரோவில் அதிபர் சிசி வரவேற்றார்.
அதன்பின்னர் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். இதையடுத்து சவுதிஅரே பியா மற்றும் எகிப்தை இணைக்கும் வகையில் செங்கடல் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும் என மன்னர் சல்மான் அறிவித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நடவடிக்கையின் மூலம் ஆப்பிரிக்கா – ஆசியா கண்டங்கள் இணைக்கப்படுகிறது. மேலும் சவுதி அரேபியா – எகிப்து இடையே வர்த்தக உறவு மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்படும் பாலத்துக்கு மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஷ் பாலம் என பெயரிடப்படுகிறது.