Breaking News

137 பேருடன் வந்த விமானத்தின் மீது மோதிய ஆளில்லா விமானத்தால் ஹீத்ரோவில் பரபரப்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின்மீது ஆளில்லா விமானம் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின்மீது ஆளில்லா விமானம் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் உயர்பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானங்களை பறக்கவிட வேண்டாம் என லண்டன் நகர போலீசார் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் நேற்று நிகழந்த இந்த மோதல் விமான நிலைய அதிகாரிகளை பரபரப்படைய வைத்துள்ளது.

ஜெனிவா நகரில் இருந்து வந்த அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பகல் 12.50 மணியளவில் லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது, அந்த விமானத்தின் முன்பகுதிமீது ஒரு சிறியரக ஆளில்லா விமானம் மோதியதாக கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட விமானி தெரிவித்தார்.

அதிர்ஷ்டவசமாக, இந்த மோதலால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 132 பயணிகள், விமானிகள் உள்ளிட்ட ஐந்து பணியாளர்களுடன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தின் ஐந்தாவது ஓடுபாதையில் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

தீவிரமாக சோதனையிட்டபோது அந்த விமானத்துக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்த பின்னர், அந்த விமானம் தொடர்ந்து பறக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.