புற்று நோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கொடிவாரமானது 09.05.2016 ஆம் திகதி தொடக்கம் எதிர் வரும் 16.05.2016 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது
( என்டன்)
புற்று நோய்
சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கொடிவாரத்தின் ஆரம்ப நிகழ்வும் கொடிகள்
விற்பனையும் இன்று இடம்பெற்றது .
இலங்கை புற்று நோய்
சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கொடிவாரத்தின் ஆரம்ப நிகழ்வும் கொடி விற்பனையும்
சங்கத்தின் தலைவரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளருமான
எந்திரி .வை . தர்மரட்ணம் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான
மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி டி . ஜெயசிங்கம் , கௌரவ
அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் .எஸ் .கிரிதரன் ,
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் .கே .பாஸ்கரன் மற்றும் இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் , வைத்திய அதிகாரிகள் , வர்த்தக சங்க
உறுப்பினர்கள் ,புத்திஜீவிகள் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலர்
கலந்துகொண்டனர் .
இலங்கை புற்று நோய்
சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கொடிவாரமானது 09.05.2016 ஆம் திகதி தொடக்கம் எதிர் வரும் 16.05.2016
ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது .
இந்த கொடிவார
காலப்பகுதியில் புற்று நோயில் இருந்து
விடுபடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளும் , புற்று நோயாளிகளை தர்சிப்பது ,
புற்று நோய் சிகிச்சை நிலையங்களுக்கு உதவிகள் வழங்குதல் , வறிய புற்று நோயாளரின்
சிகிச்சைக்கான உதவிகள் வழங்கல் போன்ற பல்வேறு விடயங்கள் இந்த கொடிவாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது
என சங்கத்தின் தலைவரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளருமான
எந்திரி .வை . தர்மரட்ணம் தெரிவித்தார் .