Breaking News

ரஷியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஓய்வு பெறுகிறார்?

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. ரஷியாவை சேர்ந்த அவர் 5 முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார்.

மரியா ஷரபோவா ‘மெல்போனியம்‘ என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதை கடந்த மார்ச் மாதம் ஷரபோவா உறுதிபடுத்தினார்.

இதையடுத்து அவருக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தடை விதித்துள்ளது. தான் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும் தனக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்து இருந்தார். ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷிய டென்னிஸ் சம்மேளன தலைவர் ஷமில் டர்பீஸ்சோவ் கூறுகையில், ஷரபோவா சூழ்நிலை கடினமாக இருக்கிறது. அவர் மீண்டும் விளையாட முடியுமா? என்பது சந்தேகம்.

ஷரபோவா மீண்டும் விளையாட முடியாமல் போகலாம் என்று நேற்று தெரிவித்தார்.

இதனால் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த ஷரபோவாவின் எண்ணத்துக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது.

ரஷிய டென்னிஸ் சம்மேளனமே அவருக்கு உறுதுணையாக இல்லாததால் அவர் விரக்தி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் டென்னிஸ் போட்டியில் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.