கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முப்படைத்தடை
கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீர் சம்பூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டபோது, கடற்படை அதிகாரியொருவரை திட்டிய சம்பவத்தை தொடர்ந்து, முப்படயினரின் முகாம்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கின்ற எந்தவொரு வைபவங்களிலும் முப்படையினரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தீர்மாகிக்கப்படுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.



