நாட்டின் மது வருமானத்தில் முறையே 1ம் , 2ம் , 3ம் இடங்களில் யாழ்ப்பாணம், நுவரெலியா, மட்டக்களப்பு!
சட்டரீதியாக மது விற்பனையின்மூலம் அரசாங்கத்துக்கு அதிகளவு வருமானமமீட்டித்தரும் மாவட்டங்களில் முறையே 1ம் , 2ம் , 3ம் இடங்களை வகிப்பது யாழ்ப்பாணம், நுவரெலியா, மட்டக்களப்புமாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்களாக காணப்படுவது ஓர் ஆரோக்கியமான செயற்பாடு அல்ல' எனவும் இன்நிலைமை மாற வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 'மதுவற்ற நாடு' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற வேலைத்திட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில், நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று(26) நடைபெற்றவேளையிலே அவர் இதனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.