Breaking News

யாழில் 100kg கேரள கஞ்சாவுடன் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு இடங்களுக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 100kg கேரள கஞ்சாவினை இன்று(27) அதிகாலையில் போலீஸ் விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியதால், பாரிய அளவில் இடம்பெறவிருந்த கடத்தலொன்றையும் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கடத்தல் நடவடிக்கையானது அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளலாய் கடற்பகுதியில் வைத்தே முயற்சி முறயடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் அச்சுவேலி பொலிஸ்  ஊடாக நீதீமன்றில் ஆஜர்படுத்துவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.