Breaking News

நடிகர் கலாபவன் மணி அவர்களின் மரணவிசாரணை CBI இடம் !

பிரபல நடிகர் கலாபவன் மணி (45) தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

அவரது உடல் உள்ளுறுப்புகளை ரசாயன பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்த போது, அவரது உடலில் ‘குளோர்பைரிபோஸ்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது தெரிய வந்தது.

இந்த வழக்கில் கேரள போலீசார் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. இதனால், இந்த வழக்கு  விசாரணையை சிபிஐ விசாரணைக்கு கேரள போலீஸ் டிஜிபி மாநில அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து, சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.