Breaking News

நடிகர் சூர்யா செய்த சிறப்பான உதவி

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ, மாணவியர் 20 பேருக்கு  ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. உதவித் தொகையை நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் வழங்கினர்.

இதில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா உரையாற்றும்போது, பலரும் தனியார் கல்வி தான் சிறந்தது என நினைக்கின்றனர். ஆனால், அதைவிட அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். இதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழச்சியாக உள்ளது.

தமிழகத்தின் பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பெருமை பொங்க கூறினார்.

இந்த விழாவில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்