Breaking News

நல்லிணக்க முயற்சிகள் தோல்வியுற்றால் எமக்கும் தோல்வி

'நல்லிணக்கம் தோற்றால் அது எமக்கு தோல்வியாகும்' என்று ஜனாதிபதி ஆங்கில நாளிதழ் ஒன்றிறிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அதுகுறித்து மேலும் கருத்துரைக்கையில்  'நல்லிணக்கம் என்பது, வெறுமனே சீமெந்து, கல், மணலினால் உருவாக்கக்கூடியது அல்ல எனவும் போர் வெற்றியுடனேயே, போர் உருவாக வித்திட்ட காரணிகள் தொடர்பிலும் கண்டறியப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் மீண்டுமொரு முறை போர் உருவாகாதிருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமெனவும் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் தீர்வு காணப்படுதலின் மூலம், நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும் இது தொடர்பில் தெற்கிலுள்ள பௌத்தர்களை தெளிவுபடுத்த வேண்டும். எனவும் தெரிவித்தார் அத்துடன் இன்நாடு எம் அனைவருக்கும் சொந்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.