Breaking News

பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட 20 குழந்தைகள் உள்பட 34 அகதிகள் மரணம்

அல்ஜீரியாவுக்கு செல்ல முயன்றபோது நைஜர் பாலைவனத்தில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 20 குழந்தைகள் உள்ட 34 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உள்நாட்டுப் போர், தீவிரவாத தாக்குதல்களால் உயிருக்குப் பயந்து அண்டைநாடுகளுக்கு குடியேறச் செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. அந்தவகையில், நைஜர், மாலி மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான அகதிகள் சட்டவிரோதமாக அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். பின்னர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது இயற்கை சீற்றம் படகு விபத்து போன்ற காரணங்களால் பலர் உயிரிழக்கின்றனர். 

இவ்வாறு சட்டவிரோதமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு கும்பல் நைஜர் பாலைவனத்தில் ஏராளமான நபர்களை இறக்கிவிட்டுள்ளனர். இவ்வாறு இறக்கிவிடப்பட்ட 20 குழந்தைகள், 9 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 34 பேர் கடந்த வாரம் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டதாக நைஜர் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தண்ணீர் கிடைக்காமல் தாகத்தில் உயிரிழந்த அவர்களின் உடல் அசாமாகா அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.