வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க தீர்மானம்!
வட மாகாணத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திற்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் 400 ஏக்கர் காணிகளை, விரைவில் அக்காணி உரிமையாளர்களிடம் மீழக்கையளிப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
இதில் முதற்கட்டமாக யாழ்.தெல்லிப்பளையில் உள்ள 200 ஏக்கர் காணிகளை இன்னும் சில வாரங்களிலும் அதனைத்தொடர்ந்து காங்கேசன்துறையில் 65 ஹெக்டேயர் விடுவிக்கப்படுமென, மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கபடுகின்றது.



