கழிவுநீர் குழாய் வழியாக தொடர்மாடிக்குள் நுழைந்த திருடன் சிக்கினார்
வெள்ளவத்தை தொடர்மாடிக் குடியிருப்பிபொன்றில் 6ஆவது மாடிக்கு, கழிவுநீர் குழாயை பயன்படுத்தி வீட்டினுள் நுழைந்து, பத்து இலட்டசம் ரூபாய் பெறுமதியான நகைகளையும் 250,000 ரூபாய் பணத்தையும் திருடிய நபரை வெள்ளவத்தைப் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர் கொஹுவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவருக்கேனே சகல வசதிகளுடன்கூடிய மூன்று மாடி ஆடம்பர வீடு, மற்றும் ஆடம்பர வான் ஆகியனவும் இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது. மேலும் இவர் பல வீடுகளில் திருடிய குற்றச்சாட்டின் காரணமாக சிறைவாசம் அனுபவித்து மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் சந்தேகநபர் விடுதலையாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.