இலங்கையின் நிலவும் இனப்பாகுபாடு குறித்து ஜெனீவாவில் ஆய்வு
இலங்கையின் நிலவுகின்ற இனரீதியான பாரபட்சங்கள் தொடர்பில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனரீதியான பாரபட்சங்களை கழைவதற்கான ஐக்கிய நாடுகளின் குழுவினர், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் 26ம் திகதி வரையில் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மாநாட்டில் இலங்கையின் நிலவுகின்ற இனப்பாகுபாடுகள் குறித்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் இம்மாநாட்டில் 18 பேர் கொண்ட சர்வதேச நிபுணர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இலங்கை தொடர்பான அறிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும்.



