முத்தையா முரளிதரனுக்கு 'Hall of Fame' ICCயின் அதியுயர் கெளரவம் !
சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கவுரவிக்கிறது. அந்த பட்டியலில் புதியதாக எம்மண்ணின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சிறப்புக்குரியவர் முரளிதரன். எம்மவர் ஒருவருக்கு இக்கெளரவம் கிடைக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இதேபோல் மறைந்த வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் லோமான் (இங்கிலாந்து), தொடக்க ஆட்டக்காரர் ஆர்தர் மோரிஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் இந்த பட்டியலில் இணைத்தது (ஐ.சி.சி.) கவுரவிக்கிறது.



