காத்தான்குடி விவசாய விரிவாக்கல் போதனாசிரியர் பிரிவில் நகர்புற தோட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும்
( என்டன்)
மட்டக்களப்பு
விவசாய திணைக்களத்தினால் மட்டக்களப்பு மத்திய வலய விவசாயத்தினைக்கள போதனாசிரியர்
பிரிவுகளில் வீட்டுத்தோட்ட
பயிர்செய்கையினை மேற்கொள்வதற்கும் வீட்டுத்தோட்ட உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் பல ஊக்குவிப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் .
இதன் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி விவசாய விரிவாக்கல் போதனாசிரியர் பிரிவின் காத்தான்குடி-5 அல்கிரா
வித்தியாலயத்தில் நகர்புற தோட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் பாடசாலை
மட்டத்தில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்கான வீட்டுத்தோட்ட
உற்பத்தி உபகரணங்களும்
வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது .
நடைபெற்ற விழிப்புணர்வு
நிகழ்வில் வீட்டுத்தோட்டத்தின் முக்கியத்துவம் வீட்டுத்தோட்டத்தினை மேற்கொள்வதற்கான
உத்திகள் ,அதன் பயன்பாடுகள் போன்ற விளக்கங்களையும் சத்துருக்கொண்டான் விவசாய பண்ணை முகாமையாளர் நிசாந்தன் கலந்துகொண்டு வழங்கினார்
இந்நிகழ்வு காத்தான்குடி விவசாயப் போதனாசிரியார் திருமதி . கே .ரவிசங்கர் தலைமையில் காத்தான்குடி
அல்கிரா வித்தியாலய பிரதான
மண்டபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு
உதவி விவசாய பணிப்பாளர் .வி. பேரின்பராஜா ,காத்தான்குடி அல்கிரா வித்தியாலய அதிபர் எம் .எ.ஜி .எம் . ஹகீம் ,காத்தான்குடி உதவி பிரதேச
செயலாளர் எ .சி . எ .அப்fகார் பிரதேச கல்விப்பணிப்பாளர் . எம் .சி . எம் .எ . பதுர்தீன்,
பாடசாலை மாணவர்கள் விவசாய திணைக்கள போதனாசிரியர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் வீட்டுத்தோட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர் .