Breaking News

கமலின் ஆசியைப் பெற்ற கிரிக்கெட் வீரர்கள்…!

ஐபிஎல்லை போன்று தமிழ்நாட்டில் திறமையான கிரிக்கெட் வீரர்ளை கண்டறிய தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று கோவை மற்றும் காஞ்சிபுரம் அணிகள் மோதின. இதில் காஞ்சி வாரியர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது. முன்னதாக கோவை அணியின் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் கமலை சந்தித்து சிறிது நேரம் விவாதித்தார். அதன்பின்னர் வீரர்கள் அனைவரும் அவருடன் வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.