Breaking News

சிவாஜிக்கு பிறகு ‘செவாலியே விருது’ கமலுக்கா ??

வள்ளி படத்தில் அறிமுகமானவர். ரயில்வே ஊழியர் ஆன, அவர் தான் சிவாஜிக்கு பிறகு தமிழ் நாட்டில் செவாலியே விருதை வாங்கியவர். வள்ளி படத்திற்கு பிறகு, மிட்டாமிராசு, கோவில்பட்டி வீரலெட்சுமி போன்ற படங்களில் வில்லனாகவும், கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் நடித்து வந்த இவர்,கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பம், மல்யுத்தம், நாடகம், நாட்டியநாடகம் போன்றவற்றிலும் நிபுணர்.

அத்தோடு மேஜிக்கில் ஆர்வம் கொண்டவர். 24 மணி நேரம் தொடர்ந்து மேஜிக் நிகழ்த்தி, கின்னஸ் சாதனை செய்தவர். ஹிப்னாடிசம் 12 மணி நேரம் தொடர்ந்து செய்ததற்கு லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்.

இவர் பெயர் அலெக்ஸ். இவர் தான் சிவாஜிக்கு பிறகு, தமிழ்நாட்டில் செவாலியே அவார்டு பெற்றவர். எல்லோரும் இவர் பெயரை சொல்லவே இல்லை என்பது மறைக்கப்படும் வரலாறு.