Breaking News

வீட்டில் எதுவும் கிடைக்காததால் பழங்களை பழங்களை திருடிய திருடர்கள் !!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் ராஜு (45). இவர் குடும்பத்தோடு கடந்த 21-ம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்றார். இன்று காலையில் வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக் கிடந்தன. சமையல் அறையிலும் பாத்திரங்கள் சிதறி கிடந்தது. கொள்ளையர்கள் பீரோவில் தேடிப்பார்த்ததில் நகையோ, -பணமோ சிக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த முட்டையை எடுத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டனர்.

பின்னர் பிரிட்ஜில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்ட கொள்ளையர்கள் அதில் இருந்த பழங்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டு அள்ளிச் சென்றனர். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.