கல்பிட்டி கடற் பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் 25 kg கேரள கஞ்சா மீட்பு!
கல்பிட்டி, கந்தக்குழி பகுதியை அண்மித்த கடற்பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த 25 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கஞ்சசாவானது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பம் வழியில் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக கடற்படைத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையை கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது..