Breaking News

உலக அழகிப்போட்டிக்கு தேர்வான அவுஸ்திரேலிய அழகி கார் விபத்தில் அகால மரணம்..!!

கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடந்த உலக அழகிப்போட்டியில் அவுஸ்திரேலியாவில் இருந்து கலந்து கொண்ட 17 வயது எலிசி மில்லர் கென்னடி என்ற அழகி கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

குயின்ஸ்லேண்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த எலிசி மில்லர் ஏழைகளுக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது 20வயது நண்பரும் உடனிருந்தார். காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இவரது காரின் மீது மோதியது.

இதில் எலிசா பலத்த காயம் அடைந்து நினைவிழந்தார். உடனே அவரை ஹெலிகாப்டர் மூலமாக கேர்ன்ஸ் பேஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக டவுன்ஸ்வில்லாவுக்கு கொண்டு செல்ல தீர்மானி’கப்பட்டது. ஆனால், அதற்குள் அவரது உயிர் பிரிந்தது.

அவரது மரணத்திற்கு ஆஸ்திரேலிய நாடே கண்ணீர் விட்டது. இதுகுறித்து தற்போதைய ஆஸ்திரேலிய அழகியான மெடலின் கோவ் கூறியிருப்பதாவது :-

17வயதில் ஒரு அற்புத ஆற்றல் உள்ள சிறுமி,அவர். அவரை சந்தித்ததில் நான் மிகவும் மகிழச்சி அடைந்திருந்தேன். வியக்கத்தக்க திறமைகள் அவரிடம் ஒளிந்திருந்தன.நாங்கள் இருவருமே போட்டிகளில் பங்கேற்க பல நாட்கள் ஒன்றாக கழித்திருக்கிறோம். முதிர்ச்சி,திறமை, கவனம் செலுத்துதல்,கேலி,அழகு என அத்தனையும் ஒருமித்து இருந்தவர் எலிசி. அவர் இறந்து விட்டார் என்று கேட்கும்போது என்னால் நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என்றார்.

அழகிப்போட்டி தேர்வாளர்கள் மற்றும் அரசு சார்பில் பலரும் அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.