Breaking News

பாகிஸ்தான் மட்டுமா.. இலங்கையும் ரொம்ப பிடிக்கும்மாம் காரணம் …!!

எனக்கு பாகிஸ்தான்மட்டுமல்ல இலங்கை மக்களும் பிடிக்கும் இலங்கை மக்கள் போர் குணம் மிக்கவர்கள் இறுதிவரை போராடி தீவிரவாதத்தை அழித்தவர்கள் என்று கூறி மீண்டும்  தீ மூட்டியுள்ளார்.

மேலும்  ரம்யா, எல்லையால் நாடுகள் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அதற்காக பிற நாட்டு மக்களை வெறுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த நாட்டில், இப்போது எளிதாக முத்திரை குத்தப்பட்டுவிடுகிறது.

எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. ஒருவர் கூறிய கருத்தை கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இதுதான் ஜனநாயகம். இந்த கருத்துக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பது அகம்பாவத்தால் அல்ல.

இதற்கு மன்னிப்பு கேட்பது, சரியான நடைமுறையாக இருக்காது என்பதால்தான். எனக்கு வங்கதேசத்தையும் பிடிக்கும், இலங்கையையும் பிடிக்கும், அதற்காக நான் நாட்டைவிட்டு வெளியேறப்போவதில்லை. எனது நாய்களை விட்டும் போகப்போவதில்லை. இவ்வாறு ரம்யா தெரிவித்துள்ளார்.