8 மணித்தியாலமாக தொடர்ந்த விசாரணையால் கடுப்பாகிய விமல் !!
மஹிந்த ஆட்சிக்காலத்தில் அரசுக்கு 40 மில்லியன் ரூபா நஷ்ட்டத்திதை ஏற்படும் வகையில் அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தினை விசாரிக்கவென நிதி மோசடிப் பிரிவிற்கு வரவழைக்கப்பட்ட விமல் வீரவன்ச எட்டு மணி நேரமாக தாம் விசாரிக்க பட்டமை தொடர்பில் தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வரும் வரை நாட்டில் நீதித்துறையென்று ஒன்று இருக்கவே இல்லையா? என தெரிவித்துள்ளார்.