Breaking News

கிளிநொச்சி பொதுச் சந்தைகடைத்தொகுதியில் தீயினால் 100இற்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசம் !!

கிளிநொச்சி, பொதுச்சந்தை கடைத்தொகுதியில் நேற்றிரவு பரவிய தீயினால் புடவைக் கடைத்தொகுதி,பழக்கடைத் தொகுதி  அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படும் பகுதி போன்றவற்றில் அமைந்திருந்த சுமார் 100 கடைகள் முழுமையாக தீயினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையனவும் குறித்த விபத்தினால் பாரியளவு நட்டம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.