Breaking News

விமானங்களை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை !!

மஹிந்தராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கென குத்தகையடிப்படையில்  கொள்வனவு செய்யப்பட்ட மூன்று A 350 விமானங்களையும் அவற்றிற்கான குத்தகையை ரத்துச்செய்து மீளவும் கையளிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானங்களில் ஓன்றினை கையேற்பதற்கு 17.5 மில்லியன் டொலர் அபராதமாக கோரிய ஜேர்மனியின் AerCap நிறுவனம் அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் ஏனைய விமானங்களையும் பொறுப்பேற்பதைத் தவிர்க்கும் நோக்குடன் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் தற்போது இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.