Breaking News

மதுபாணம் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான அதிகரிக்கப்பட்ட வரியை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்.

மதுபாணம் மற்றும் புகையிலை பொருட்கள் மீது அதிகரிக்கப்பட்ட வரியை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறுகோரி யாழ்ப்பாணம் சங்கானை பேரூந்து தரிப்பிடத்தில் கவன ஈர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வும் நடைபெற்றது. வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனம் ஏற்பாடு செய்த இப் போராட்டத்தில் சமூக நலன் விரும்பிகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அங்கு வினா எழுப்பப்பட்டது.

சிகரட் வரியை அதிகரிக்க எண்ணிய சுகாதார அமைச்சருக்கு தடையாக இருப்பவர் யார்? ஜனாதிபதியும் பிரதமரும் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு என்ன நடந்தது போன்ற வாசகங்கள் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தார்கள்.