தனது 9வயது மகளை ஒரு வருடமாக தனது நண்பர்களுக்கு விருந்தளித்த தாய் கைது !!
அவுஸ்திரேலியாவில் 9 வயது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு வற்புறுத்திய தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 9வயது மகளை கடந்த ஒரு ஆண்டாக வற்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
உடல் நிலை பாதிப்படைந்த நிலையில் தற்பொழுது அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உளவியல் மருத்துவர் அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் “தான் ஒரு வருட காலமாக தனது தாயின் நண்பர்களால் பலமுறை கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தனது தாயே தனக்கு தூக்கமாத்திரை கொடுத்தும் மேலும் வற்புறுத்தியும் அவரது நண்பர்களால் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவர்கள் போலீஸில் புகார் கொடுத்த பின்பு தான் இந்த செய்தி வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தாயை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.