Breaking News

விக்னேஷ் உடலை சீமான் அலுவலகத்துக்கு கொண்டு செல்ல அனுமதி…

காவிரி பிரச்சினைக்காக நாம் தமிழர் கட்சியின் பேரணியில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விக்னேஷ் என்ற இளைஞர் உயிர் நீத்தார். அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, கட்சியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது உடலை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதற்கு முடிவு செய்தனர். ஆனால், போலீசார் இதனை மறுத்தனர். அவரது சொந்த ஊரான மன்னார்குடிக்குத்தான் கொண்டு செல்லவேண்டும் என்று போலீசார் கூறினர்.

இதனால் கோபமான நாம் தமிழர் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு சீமான் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இதற்குள் ஆம்புலன்ஸ் டிரைவரை சிலர் தாக்கினர். ஆம்புலன்ஸ் முன்பு ஏராளமானவர்கள் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வேறு வழியின்றி போலீசார் பின்வாங்கினர்,

விக்னேஷின் உடலை நாம் தமிழர் அலுவலகம் கொண்டு செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். இன்று மாலை 6 மணி வரை அவரது உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் மன்னார்குடி கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை 11 மணிக்கு மன்னார்குடியில் விக்னேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.