ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65ஆவது சம்மேளனம் இன்று குருநாகலில் !!
குருநாகலை மாளிகாபிட்டிய விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் இச்சம்மேளனத்தில் அதிகளவான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதால் இலங்கை போக்குவரத்து சபையினால் அனுமதிக்கப்பட்ட பேரூந்துகள் மற்றும் தனியார் பஸ்களும் பெருமளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்மேளனத்தையொட்டி பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுமார் 1500 பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துளார்.