Breaking News

2.24 கிலோ கிராம் ஹெரோயினுடன் இந்திய பிரஜை உள்ளிட்ட 5 இலங்கையர்கள் கைது

மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் 2.24 கிலோ கிராம் ஹெரோயினை கடத்திய ஒரு இந்தியப் பிரஜையுடன் 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(03) மாலை கடற்படையின் இரகசியப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமையவே ஹெரோயினுடன் போதைப்பொருள் கைப்பற்றப் பட்டதாகவும் இச்சுற்றிவளைபில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் ஹெரோயின் ஆகியன சட்ட நடவடிக்கைகளுக்கென வவுனியா பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.