1.1 மில்லியன் ரூபா பெறுமதியான ரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீனப் பெண் கைது!
நேற்றிரவு(28) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக ரூபா 1.1 மில்லியன் விலைமதிப்புள்ள ரத்தினக் கற்களைக் கடத்த முற்பட்ட சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
30 வயதுடைய குறித்த பெண் ஹொங்கொங் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானத்தில் ஏறமுயன்றபோது சுங்கப்பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பெண் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டபோது குறித்த தொகை ரத்தினக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் இலங்கைக்கு அடிக்கடி வந்து செல்பவர் என்பது குறிப்பிடத்தகக்து.