மாணவனை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியவர்களுக்கு நிபந்தனை பிணை!
16 வயதுடைய பாடசாலை மாணரொருவரை தொண்டமானாறு கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்று, மாணவனுக்கு மதுபானம் வழங்கி ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்த முயன்றதாக குற்றச்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை நிபந்தணையடிப்படையிலான பிணை வழங்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் அனுமதியளித்தார்.
குறிப்பிட்ட சந்தேகநபர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பினையிலும் அத்துடன் இவர்கள் அனைவரும் அவர்களினது வதிவிடத்தை உறுதிப்படுத்தும் வகையில் கிராமஅலுவலரின் அத்தாட்சிபடுத்திய விண்ணபத்தினை 1 வாரத்துக்குள் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிப்பதுடன் சாட்சிக்கு எவ்வகையான அச்சுறுத்தல்களும் விடுக்ககூடாது ஆகிய நிபந்தனைகளை நீதிவான் விதிவிதித்துள்ளார்.