ரஞ்சித்தை தொடர்ந்து முத்தையாவுக்கும் அல்வா ஆனா நயன்தாரா ஓகே !!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை இயக்கிய ரஞ்சித், அந்த படத்தை அடுத்து சூர்யாவை இயக்கவுள்ளதாக அறிவித்தார். ஆனால் ரஞ்சித்தின் ஒடுக்கப்பட்ட இன கருத்துக்கள் சூர்யாவை அதிருப்தி அடைய செய்ததால், கதையை மாற்றும்படி கேட்டுக்கொண்டார். இதனால் இந்த படம் டிராப் ஆனது.
இதனையடுத்து 'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அதுவும் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டது.
இப்போதைய தகவலின்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தயாரிப்பில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அடுத்து சூர்யா 'அருண்குமார் இயக்க்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.