Breaking News

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் மீதான தான தாக்குதல் தொடர்பில் இருவருக்கு பிணை !!

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் மீது கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து நடாத்தபட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவர் இன்று பிணையில் விடுபக்கபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுகின்றது. 

இவர்கள் கலைமுகிலன்(25) மற்றும் பாலமுருகன் (34) ஆகிய இருவருமே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தம் நிரபராதிகள் என நீதிமன்றில் தெரிவித்துள்ளதாகவும்  மேலும் சிலரை மலேசிய பொலிசார் தேடி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் இவர்களின் குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக இரு வருட சிறை அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை ஒக்டோபர் 7ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளத.